Apr 11, 2009

ஆசை ஆசை

சிறுவயது முதலே என்தந்தை
என்னை தொட்டுத் தூக்கியதில்லை.
ஆனாலும் அவரது தோளில்தான்
பயணம் செய்தேன்.

நானும் ஆசைப் பட்டேன்,
ஒருநாள் அவரை என்தோளில்
சுமப்பேன் என்று.

ஆனால் அவர்தம்
இறுதி ஊர்வலத்திலும்
என் ஆசை நிறைவேறவேயில்லை.

இன்னும் உறுதியாய் இருக்கிறேன்
அவர்(பெயரை) வெகுதூரம்
சுமந்து செல்வேன் என்று.

Jan 19, 2009

க்கூஊ

தாய்மையின் பெருமையை
தரணியெங்கும் பேசி
புளங்காகிதம் அடையும்
வேளையிலும் தலைகாட்டத்
தவறுவதில்லையே!
கூடு கட்ட மறந்த குயில்கள்....