Tuesday, June 17, 2008
New Exam pattern in India (Revised)
1. General students - Answer ALL questions .
2. OBC - WRITE ANY one question.
3. SC - ONLY READ questions.
4. ST - THANKS FOR COMING..
AND.
5. Gujjars- THANKS FOR ALLOWING OTHERS TO ATTEND THE EXAMINATION .. !!
கமெண்ட்ஸ்
ஜயராமன் said... கிண்டலையும் மீறி தேசத்தின் இழிநிலையை யதார்த்தமாக சொல்கிறது. தந்ததற்கு நன்றி.
இன்னொரு வகையும் இருக்கிறது. பணம் கட்டினால் வீட்டிற்கு சர்டிபிகேட் தேடி வரும். தேர்வு இடத்துக்கு போகவே வேண்டாம். சிறப்பாக டாக்டர், கவிஞர் பட்டங்கள் இதில் அடக்கம். அதற்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சம் பணம் அதிகமாக இருந்தால் பித்தளை தாரகை என்று கூட ஒரு புதிய பட்டம் பெறலாம்.
-
என் மதிப்பிற்குரிய ஜெயராமன் அவர்களுக்கு
தலித் மக்கள் இன்னும் பின்தங்கியிருக்கின்றனர். உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். 30% வளர்ச்சியை அவர்கள் அடைந்திருக்கின்றனர்.
பிசி, எம்பிசி முன்னேறிவிட்டனர். சரி உங்களை வழி மொழிகிறேன். 90% வளர்ச்சியை அடைந்திருக்கின்றனர்.
இன்னும் சில உயர் பதவிகள் மீதம் இருக்கின்றதே. அதையும் நாங்கள் அடைந்து கொள்கிறோமே.
அதன்பிறகு நாம் இருவருமே காத்திருப்போம் அவர்கள் வரும்வரை.
நீ செய்த பாவம் உன் பிள்ளைகளுக்கு என்பர்.
ஐயமீர் இன்னும் இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையெனில் சில சமுகங்கள் மேலே வரமுடியாது என்ற நிலையே உள்ளது.
அதுவரை முன்னோர்கள் செய்த பாவத்திற்கு பிராயசித்தமாக காத்திருங்கள்.
மந்தைக்கு மேயச் செல்லும் மாடுகளில் முந்திச் செல்லும் மாட்டினை கட்டையை கட்டி அதன் வேகத்தை குறைப்பார்கள்.
மேலும் நடக்க முடியாத கன்றினை தோழில் சுமந்து செல்வர்
அப்பொழுதுதான் மேய்ப்பனால் அனைத்து மாடுகளையும் அரவணைத்து செல்ல முடியும். இறுதியாக வரும் மாடு இலக்கினை அடையட்டும். நிச்சயம் கட்டுகள் விலக்கப்படும்.
//// ஐயமீர் இன்னும் இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையெனில் சில சமுகங்கள் மேலே வரமுடியாது என்ற நிலையே உள்ளது. ///
நீங்கள் சொல்லும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் sc / st க்கு வழங்கும் உரிமைகளை யாருமே கேட்கவில்லை. ஆனால், அரசிலும், சமூகத்திலும் ஆதிக்க சக்தியாக இருந்துகொண்டு இன்னும் நான் பிற்படுத்தப்பட்டவன், மிக பிற்படுத்தப்பட்டவன், இதர பிற்படுத்தப்பட்டவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தன் கீழ் தலித் மக்களை இன்னும் கொடுங்கோல் அடக்குமுறை பண்ணிக்கொண்டு எல்லா சமுதாயங்களையும் ஏமாற்றும் ஒரு ஆதிக்க கூட்டத்தைப்பற்றித்தான் பேச்சு.
அவர்கள் பின்பற்றி இருக்கிறார்களா. எந்த விதத்தில். பணத்திலா, அந்தஸ்திலா - அப்படி என்றால் பணம், அந்தஸ்து என்று தகுதி அடிப்படையில் பின்பட்டவர்களை அடையாளம் காண வேண்டியதுதானே. ஏன் சாதியை கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். கிரீமி லேயர் கூட போய் விடக்கூடாது என்று ஏன் இந்த ஆதிக்க சக்திகள் கூப்பாடு போடுகின்றன.
நீங்கள் சொன்ன "முன்னேபோகும் மாடு" உதாரணம் அதற்கு இல்லையா. இந்த ஆதிக்க சக்திகளை ஓரம் போக சொல்லுங்கள்.
உண்மையான sc / st தலித் மக்கள் பலன் கிடைக்கும்வரை இவர்களை ... பிடித்துக்கொண்டு ஓரமாக உட்காரச்சொல்லுங்களேன். தனக்கு என்று வரும்போது அந்த மாட்டுக்கு தடை போடக்கூடாதா! உங்கள் நியாயம் அநியாயமாய் இருக்கிறது.
நன்றி